அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை செய்பவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்யும் தரகர்கள் மீது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களை தாக்கல் வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் கொண்ட அமர்வு,... நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க  உத்தரவிட்டனர். 


மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனைச் செய்பவர்கள் மீது எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.