Kilambakkam Bus Stand: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்தில்' இருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார்  பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ஆம் தேதி தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்னி பேருந்து தரப்பின் மனு


இந்த உத்தரவை எதிர்த்து YBM மற்றும் வெற்றி ஆகிய தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போக்குவரத்து ஆணையரின் புதிய கட்டுப்பாடு 20 ஆண்டுகால நடைமுறைக்கு எதிரானது என்றும், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2003ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கிய போதும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கிளாம்பாக்கத்தில் TNSTC பஸ்கள்: எந்தெந்த ஊருக்கு எந்தெந்த பிளார்ட்பார்ம்?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதால் தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.


ஆம்னி பேருந்து தரப்பின் வாதம்


இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பேருந்து நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜாராகி, "கடந்த ஜன. 24ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு, இரு நாட்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை தனியார் பேருந்துகளை கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும்" என வாதாடினார்.


இதையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.


நீதிபதி உத்தரவு


இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றார். தொடர்ந்து, இதுகுறித்து அரசு தரப்பு விளக்கம் அளித்து வழக்கின் விசாரணையை நாளை (பிப். 1) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


தற்போது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிளாம்பாக்கம் செல்லும் மக்களுக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை என்பது தனியார் பேருந்துகளின் வாதமாகவும் இருக்கிறது. மெட்ரோ, ரயில் நிலையம் போன்ற வசதிகள் வந்த பின் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க | இனி அனைத்திற்கும் கிளாம்பாக்கம்தான்... ஆம்னி முதல் SETC வரை - முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ