கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்குகள் கண்காணித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவி செல்ஃபோன் எதுவும் பயன்படுத்தவில்லை என மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மாணவியிடம் செல்ஃபோன் இருந்தும் அதனை வழங்க மறுத்தால் அது சட்டப்படி தவறு எனவும் அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடிலாம் எனவும் எச்சரித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக  நீதிபதி சந்திரசேகரன் முன் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி,  மாணவியின் செல்ஃபோனை காவல்துறையிடம் தாங்கள் ஒப்படைக்க முடியாது எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் முறையீடு செய்தார். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், செல்ஃபோனை பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, செல்ஃபோனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் எங்கே...? மறைத்தால் தண்டனைதான் - பெற்றோருக்கு நீதிபதி எச்சரிக்கை


அப்போது குறுக்கிட்ட  நீதிபதி, வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல்துறையிடம் செல்ஃபோனை வழங்கினால்  உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும் என கூறி, பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தார். தாமதிக்காமல் செல்ஃபோனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


முன்னதாக, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்து நியாயமான விசாரணை கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு  கடந்த டிசம்பர். 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ