மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்காசியை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 31. இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


இவர்கள் 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். 


முன்னதாக தென்காசியில் வசித்த போது தனலட்சுமிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு (Illegal Affair) இருந்துள்ளது. அதை அறிந்த கணவர் அப்போதே அதை கண்டித்தும் இருக்கிறார்.


இந்நிலையில் திருப்பூர் வந்த பின்பும் தனலட்சுமி தனக்கு துரோகம் செய்து தென்காசியில் உள்ள நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது குமார் தகராறு செய்து வந்துள்ளார். 


நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்து உள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 


அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வேலம்பாளையம் போலீசார் (TN Police) குமாரை கைது செய்து தனலட்சுமியின் உடலை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ALSO READ | சிறைச்சாலையில் செல்போன்: கைதிகளுக்கு அதிகாரிகளே உதவினார்களா? 


ALSO READ | கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR