தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடற்கரை பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பும் நாளை முதல் நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.