சென்னை வடபழனியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடபழனி தெற்கு பெருமாள் வீதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்த மின்சாரப் பெட்டி மூலம் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 


இந்த புகைமூட்டத்தால் ஏற்பட்ட  மூச்சுத் திணறல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  


இதற்கிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.