பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக தெரிவித்தார் வைகோ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருக்கு சகோதரனாக, உற்ற துணையாக இயங்கி ஒளி குன்றாத மணிவிளக்காக திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற அண்ணன் பேராசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன்.
அவர் நலமாக இருக்கின்றார்” என தெரிவித்தார்.


DMK பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். இவர் சமீப காலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.


இந்நிலையில் இன்று தனது 98-வது பிறந்நாள் காணும் அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று சந்திது பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்துக்கொண்டார்.