மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது. 


இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும்  கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா இரண்டாவது இடத்தையும், திருச்சியை சேர்ந்த  சையத் அபி்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


கலந்தாய்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்:-


கவுன்சிலிங்க குறித்து மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இணையத்தை தொடர்நது பார்த்து வருவதன் மூலமும் தகவல் தெரிந்து பின் கலந்தாய்விற்காக சென்னை புறப்பட்டு வரலாம் என்றார்.