மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திடீர் சாமியாக அன்னபூரணி அம்மா மக்களுக்கு அருள் வாக்கு வழங்கி வந்தார்.  இவரை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  இதனை அடுத்து இவரின் கடந்த கால வாழ்க்கையும் வெளிவர தொடங்கின.  2020ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார்.  தனது கணவனை பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக இவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இப்படிப்பட்ட ஒருவர் எப்படி "அம்மாவாக" மாறி மக்களுக்கு அருள் வாக்கு வழங்க முடியும் என்று இணையத்தில் அனைவரும் பேச தொடங்கினர்.  இது தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.  அன்னபூரணி அம்மா பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.  இவரின் முந்தைய ஆசி வழங்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைவராலும் பகிரப்பட்டு மீம் மெட்டிரியளாக மாறியது.  



பின்பு, செங்கல்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை எச்சரித்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.  இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அன்னப்பூரணி அம்மா இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.  அதில், "மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரப்ப பட்டு வருகிறது.  இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார்" என்று அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.  


ALSO READ | ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி      


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR