தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் நேற்று 3.6 அடி உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணைக்கு வரும் நீரின் அளவு 10,535 கன அடியிலிருந்து 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக அதிகரித்துள்ளது. 


இந்நிலையில், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.