திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மு.க ஸ்டாலினுக்கு கண்புரை நோய் இருந்ததால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சங்கரநேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு கண் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டது. 


அறுவை சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய அவர் ஓரிரு நாள் ஓய்வு எடுக்கிறார். பின்னர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது.