சென்னை: திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டதாக தகவல் வந்தது. 


இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் சென்னை வர உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.