டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார்.


இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் 19 எம்.எல்.ஏ.க்களும் சொகுசு பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.


புதுச்சேரி அரியாங்குப்பம் அருகில் உள்ள சின்ன வீராம் பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தற்போது அவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.