தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-


தென் தமிழக பகுதிகளில் நிலவி வரும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும். 


இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தின் உள்மாவட்டங்களை பொறுத்தவரையில், இயல்பான வெப்பத்தை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.


இவ்வாறு கூறப்பட்டுள்ளது.