பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்தியாமோகன்(31), இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 2019 ம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன்(29), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்ததாகவும் மேலும் தனது உணவு முறை குறித்து தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை கேட்க அவரை உடற்பயிற்சி கூடத்தில் அணுகிஉள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பாஜக கட்சியை சேர்தவரிடன் 50 லட்சம் மோசடி!


கடந்த ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்காக கோயம்புத்தூர் சென்ற போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டதாகவும் சில மாதங்களாக கணவன், மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.   



இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு தன்னை சமீபமாக துன்புறுத்தியதாகவும் மேலும் தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்ததாகவும் தன்னை பலமுறை தாக்கி காயப்படுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 



இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்தபோது காதலிதை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானதையடுத்து பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR