குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.


இப்போராட்டத்திற்கு கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் மருதம். மாரியப்பன் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் சந்தோசு மற்றும் நகர இணைச்செயலாளர் விசயராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாரதி நகர் பெண்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


 


தகவல்: நாம் தமிழர் கட்சி