கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளிடம் கொண்டை ஊசி சீப்பு உள்ளிட்ட பெண்களுக்கான பொருட்களை விற்பனை செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் நரிக்குறவர் பெண்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த புறக்காவல் நிலைய பெண் போலீசிடம் புகார் அளித்தார். உடனே இளைஞரிடம் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். 



மேலும் படிக்க | மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தமிழகத்தில் தொடரும் அவலம்!


இதனால் உஷாரான இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடவே போலீசார் துரத்திச் சென்று பிடித்து தொடர்ந்து விசாரித்தனர். அப்போது தன்னை மன்னித்து விடுமாறு கூறி அந்த இளைஞர் பெண் போலீசின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்தில் பதட்டம் நிலவியது. 


மேலும் படிக்க | கர்நாடகாவை தொடர்ந்து தமிழக பள்ளியில் ஹிஜாப் தடை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR