சென்னையில் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானிற்கு சென்ற மதுரவாயல்  சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, கொலையாளியை பிடிக்கும் பணியில் இரு மாநில போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையாளி நாதுராமின் கூட்டாளி நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது.