நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, இன்று முதல் (08-10-2018) துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். 


இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி விரதம் தொடங்கும் நேரம்:- 


08.10.2018 [திங்கட்கிழமை] காலை 11:32 மணி - அமாவாசை திதி


கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த 
நேரம்:-
காலை 6.15- 7.15 மணி, 9.15-10.15 மணி.
மாலை 4.45 - 5.45 மணி, 7.30 - 8.30 மணி.


அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு.


கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.