அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது:-


முதல்வர் எடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக (அம்மா அணி), ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சிதலைவி அம்மா) அணிகள் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 


ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தமிழக முதல் அமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். கட்சியை வழி நடத்த 7 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.