சென்னை: மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்தை ஒப்படைத்தது கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு. புதிய கல்வி கொள்கை திட்டத்தை இணையதளத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலி வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், 3 மொழி கொள்கை என்பது கட்டாயம் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்து இனி இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்தும் தெரிவிக்கலாம் என்று nep.edu@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது.


இதற்கு தமிழகத்தில் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், இதுகுறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, 3 மொழி கொள்கை என்பது கட்டாயம் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் எப்பொழுதும் 2 மொழி கொள்கை தான் செயல்பாட்டில் இருக்கும். 3 மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில அரசின் நிலை குறித்து குறிப்பிட்டு உள்ளோம் எனக் கூறினார்.