கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு  (Lockdown) அறிவிக்கப்பட்டது. 


ALSO READ | E-Pass: தமிழகத்தில் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி


மேலும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு (E-Registration) செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதாவது அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய  உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டஙகளுக்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையும் பயணம் செய்வதற்கு இ -பதிவு  முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் கடந்த 7ஆம் தேதி கொரோனா நிவாரண நிதிக்கான கோப்பில் கையெழுத்திட்ட மு.க.ஸ்டாலின் இரண்டு தவணையாக நான்காயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென்றும் முதல் தவணை 2000 ரூபாயை இந்த மாதமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன் படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரனோ நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதமே ரூ.2,000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR