படுக்கை வசதி, கழிவறை வசதி எனப் பல்வேறு வசதிகளுடன் கூடிய 2,000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற முறையீட்டு உள்ளிட்ட பல்ல்வேறு பெரும் எதிர்ப்புகள் தமிழகத்தில் கிளம்பியுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் அதிரடி மாற்றங்களைச் செய்வதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தனியார் பஸ்களுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய 2000 புதிய பஸ்களை மே மாதத்திற்குள் வாங்க தமிழக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக தமிழக போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகையில்;- முதல்கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய 40 பஸ்கள், கழிப்பறை வசதியுடன் கூடிய 20 பஸ்கள் உள்ளிட்ட 2000 புதிய பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பஸ்கள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.


அதுமட்டுமின்றி சென்னையில் 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசுப் பங்களிப்புடன் வாங்க இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது.


தமிழகத்தில் சாதாரண பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பஸ்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் நவீன வசதியுடன் கூடிய 2000 புதிய பஸ்களை வாங்க தமிழக போக்குவரத்து துறை முடிவ செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.