சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரைக்கல் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்ததையடுத்து, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து பல இடங்கள் நீரில் மூழ்கியது. 



தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்னும் அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி , மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இதனால் வரும் 25-லிருந்து தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும்.  இப்போது உருவாகியுள்ள காற்றழுத்த பகுதியானது ஒரே மாதத்தில் மூன்றாவது முறை நிகழப்போகும் காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR