சென்னை :  நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நீராவி பிடிப்பது கொரோனா பரவுவதில் இருந்து தடுக்காது என சுகாதாரத்துறையும் மருத்துவர்களும் விளக்கியும் கூட தொற்று பரவல் தணியும் வரை பல வீடுகளில் நீராவி பிடிப்பது நின்றபாடில்லை.ஆனால் நீராவியை சுவைத்தாலே போதை கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா..????நம்பிதான் ஆக வேண்டும்.


சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த ஆச்சரியம் அளிக்கும் மதுபானம்  விற்கப்படுகிறது. இந்திய பணமதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மதுவை அனைவராலும் வாங்க இயலாது. 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது.  இந்த மதுவை வாங்கும் நபர்களுக்கு மட்டும் சுவைத்து பார்க்க சிறிதளவு வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடருக்கு பிறகு சர்வதேச விமான சேவைகள் கடுமையாக முடங்கியுள்ள நிலையில், தற்போதும் அந்த மதுபானம் விற்கப்படுகிறதா...???என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.இருப்பினும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.


ALSO READ ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறப்பு - சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR