ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.


இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த 9-ஆம் தேதி Sterlite ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.


மேலும் Sterlite ஆலையினால் மட்டும்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா?, Sterlite ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு படுகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. 


இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடி பதில் அளிக்காத நிலையில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இதனையடுத்து நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். 


இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 17-ஆம் நாள் நடைப்பெற்றது. விசாரணையின் போது நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை ஆகஸ்ட் 20-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


இந்நிலையில் இன்று  ஸ்டரலைட் ஆலையால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது.


இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைக்கப்படும் விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது!