சென்னை / புதுச்சேரி: கடுமையான சூறாவளி புயல் புதுச்சேரி அருகே கடற்கரையை கடந்து மிதமான சூறாவளி புயலாக பலவீனமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சூறாவளி புயல் புதன்கிழமை பின் இரவிலிருந்து துவங்கி வியாழனன்று அதிகாலைப் பொழுதில் கடலைக் கடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் அளவில் தீவிர சூறாவளியாக உருவான நிவர் புயலால் (Nivar Cyclone) எழும் நிலைமையைக் கையாள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பிற்காக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். புயல் கரையைக் கடக்கும் போது பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



முன்னதாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு (NDRF) மொத்தம் 50 அணிகளை பணியில் அமர்த்தியிருந்தது. 30 குழுக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் பணியமர்த்தப்பட்டிருந்தன.



சூறாவளி வங்காள விரிகுடாவிலிருந்து (Bay of Bengal) கடலோரப் பகுதிகளை நோக்கி முன்னேறுவதைக் கருத்தில் கொண்டு.


நாசா வேர்ல்ட்வியூ செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்திய வானிலை மையம் சூறாவளியின் பாதையை கண்காணித்தது.


கடுமையான சூறாவளி புயல் அடுத்த சில மணிநேரங்களில் நிவர் ஒரு "சூறாவளி புயலாக" பலவீனமடைய வாய்ப்புள்ளது. புதுச்சேரி (237 மிமீ), தமிழ்நாட்டின் கடலூர் நகரம் (237 மிமீ) மற்றும் மாநில தலைநகர் சென்னை ஆகிய இடங்களில் நேற்றிரவு அதிக மழை பெய்தது.


மிகவும் கடுமையான நிவர் சூறாவளி நேற்று இரவு கடற்கரையைத் தாக்கியது. இரவு முழுதும் அதி தீவிர நிலையில் இருந்த இந்த சூறாவளி இன்று அதிகாலை கடலைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகிலுள்ள தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கரையை கடந்தது. கடக்கும்போது, ​​சூறாவளியால் மணிக்கு 120 முதல் 130 கி.மீ வரை வேகமான காற்று வீசியது. இது பின்னர் மணிக்கு 140 கி.மீ. ஆக தீவிரமடைந்தது.


ALSO READ: நிவர் புயலைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை TNSDMA பயன்படுத்தம்!


நிவர் சூறாவளி பலவீனமடைந்து வருவதால், இது பெங்களூருவை நோக்கி நகர்ந்தவுடன் பலத்த காற்று வீசாது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) நகரத்திற்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கையை அளித்துள்ளது.


எனினும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகம் (Tamil Nadu) மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


கனமழை எச்சரிக்கை


தமிழகத்தின் 21 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அடுத்த இன்று பிற்பகல் வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அடுத்த 2 மணி நேரத்துக்கு திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்..


அரியலூர், திண்டுக்கல் , தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு உட்பட 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.


ALSO READ: Live Updates: ஏழு கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் 465 ஆம்புலன்ஸ்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR