தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில்தான் அதிக அளவு மழை கிடைக்கும்.


ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 147 சதவீதம் வரை பெய்ததால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கடலுக்குள் சென்றது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-


வடகிழக்கு  பருவமழை காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிகிறது. கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும்,31-ஆம் தேதி வரைதான் பருவமழை கணக்கிடப்படும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளது. மேலும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் மழை பெய்தால் குளிர்கால மழையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


இவ்வாறு தெரிவித்தார்.


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.