சேலம்: சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளர் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு அதிகரித்துள்ளது...


சேலத்தில் கடை வைத்திருக்கும் ஜெயராமன் வட மாநில வியாபாரியான இவர் இன்று அதிகாலை வழக்கம்போல கடையை திறந்துள்ளார். அப்போது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.


அந்த சமயத்தில் திடீரென வந்த 6 பேர் கொண்ட வட இந்திய வாலிபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


மேலும் படிக்க | தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?


வாக்குவாதம் முற்றிய நிலையில், கடைக்கு வந்த ஆறுபேரும் அதிரடியாக கடை உரிமையாளர் ஜெயராமனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து சென்றனர்.


ஏற்கனவே கடையின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில், கடை உரிமையாளரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.  இதனை நேரில் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.


கடையில் பொருள் வாங்க வந்தவர்கள் ஏதும் புரியாமல் திகைத்தனர். அவர்கள் உடனடியாக, ஜெயராமனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். 


ஜெயராமனின்  தந்தை மூலாராம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடத்தல் சம்பவம் குறித்து சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


மேலும் படிக்க | 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை - கிணற்றில் பிணமாக கிடந்த ரகசிய காதலன்


புகாரினி அடிப்படையில் விரைந்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர், கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு, கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, 6 பேர் கொண்ட வாலிபர்கள் ஜெயராமை வலுக்கட்டாயமாக கடையிலிருந்து இழுத்துச் செல்வது தெரியவந்தது


இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மாநகர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்த பட்டு வருகிறது. தொழில் போட்டி காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


வட இந்தியர்களே, வட இந்திய வாலிபரை கடத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் சிசிடிவி காட்சிகள் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில்உள்ளனர்


மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR