21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டி இல்லை என்று ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததோடு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதுவரை கட்சி பெயர் அறிவிக்காத நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கபோவதில்லை என சமீபத்தில் தெரிவித்தார். 


இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், அத்துடன், தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்லி இருந்தீர்கள். மாநில கட்சியா ? மத்திய கட்சியா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரண்டு கட்சிகளுக்கும் தான் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.