அதிமுக பொதுக்குழு வானகரத்தில் இன்று நடக்கவிருக்கிறது. 2,750 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இப்பொதுக்குழுவிலேயே பொதுச்செயலாளர் ஆகிவிடுவது என்று கணக்கு போட்டு எடப்பாடி பல வேலைகளை செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓபிஎஸ் இறங்கிவந்தும் ஒற்றைத் தலைமைதான் என முஷ்டி முறுக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.



பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடுக்கு சென்றது.


மேலும் படிக்க | ஓ.பி.எஸ்-க்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவா? - வைத்திலிங்கம் பேட்டியால் பரபரப்பு!


மேல்முறையீட்டு மனுவை நேற்று நள்ளிரவு விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவில் புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துக்கொண்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதிலும் புதிய முடிவு எடுக்கக்கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.


மேலும் படிக்க | கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்... அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது?


நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவுக்கு கடிவாளம் போட்டதாகவே கருதப்படுகிறது.  இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பியுமான ஓ. ரவீந்திரநாத், “மேல் முறையீட்டு வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு சிறந்த தீர்வு.


 



இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாகத்தான் பார்க்கிறோம்.இன்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்” என்றார்.



இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வேன் ,வரவுசெலவுத் திட்டக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்,அதை நான்தான் செய்ய வேண்டும்” என கூறினார்.


மேலும் படிக்க | ஓ.பி.எஸ்.க்கு கடும் பின்னடைவு! அதிமுக கட்சி சட்ட விதிகளை திருத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR