சென்னை: டில்லியில் இருந்து கும்பகோணத்திற்கு வங்கி பணிக்காக வந்த பெண்ணிற்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 4 நபர்களுக்கு ஆயுள் சிறை வழங்கிய நிலையில் மேல் முறையீடு என்பதை காரணம் காட்டி நிபந்தனை ஜாமில் வெளியே வந்து தலைமறைவான இருவரின் ஒருவர் கைது செய்யப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வங்கிப் பணிக்காக டெல்லியில் இருந்து கும்பகோணம் வந்த பெண்ணை, தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன், வசந்தகுமார் என நான்கு பேர் கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்தனர். இதில் நால்வருக்கும் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த தண்டனையை எதிர்த்து இந்த நால்வரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். இவர்கள் நால்வரும் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 


மேலும் படிக்க | நைஜீரியா துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்


இதனைத் தொடர்ந்து புருஷோத்தமன், அன்பரசன், ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தினேஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவர் தலைமறைவாயினர்.


இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தேப்பெருமாநல்லூர் அருகே செண்பகமுத்து என்பவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்ட காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னை தாக்கியது வசந்தகுமார் மற்றும் தினேஷ் என்று தெரிவித்தார்.


அவர் கொடுத்த துப்பீன் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் தொடர்ந்து தேடி வந்தனர். இதில் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் டெல்லி பெண் பாலியல் வழக்கில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள தினேஷ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க |  அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ