வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கை ஏற்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். அதைக்குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில் கூறியதாவது:-


தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 


வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, தருமபுரி மாவட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 10.2.2018 முதல் 30 நாட்களுக்கு, 77.760 மி.கன அடி தண்ணீரைத் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 


இதனால், தருமபுரி மாவட்டம், அரூர வட்டத்திலுள்ள 5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி,நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.