டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. 


இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது. இதையடுத்து, டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 


இன்று அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், வெல்லமணி நடராஜன், வளர்மதி ஆகியோர் கல்லணை தண்ணீரை டெல்டா விவசாயத்திர்காக திறந்து வைத்தனர்.