சென்னை: சசிகலா முதல் அமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.


இதனிடையே வித்யாசாகர் வருகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகை முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.