சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பானா சூழலில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை விசாரணை நாளை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி 18, 2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 


இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏ.கே. சிக்ரி என்ற நீதிதி தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது நீதிபதி ஏ.கே. சிக்ரி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு விசாரிக்காமலேயே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. சுமார் 2 ஆண்டுகல் ஆகியும், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. கோடை கால விடுமுறைக்கு பின்பு, நேற்று உச்ச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியது. 


இதனையடுத்து, இன்று திமுக சார்பில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 


ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதேவேளையில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்திருந்தார். 


இந்தநிலையில், ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விசாரணை நாளை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.