ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி சேனல் தொடங்க ஓ பன்னீர்செல்வம் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று தனி டெலிவி‌ஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளந்தது. இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி அம்மா டி.வி. என்று புதிய டெலிவி‌ஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது.  


இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ. பன்னீர்செல்வம் அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.