இன்று டெல்லி செல்லும் தமிழக முன்னாள் முதல் அமைச்சசர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மும்பையில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கணாம்பூர் கோவில் ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. 


இதனால் நேற்று மாலை மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை 11 மணி அளவில், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படும் மேலும் என அதிமுக அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு எட்டப்படும் தெரிகிறது.