ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.


மேலும் அதிமுக-வின் இரு அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து வெளியேறினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.


இதனால், முதல்வர் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.