சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2 நாட்களில் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழா நெருங்கும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் பெரும் கவலை தருகிறது. மீனவர் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.