இரண்டாக பிளவு கொண்டிருந்த அதிமுக அணிகள் இணைந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் இருவருக்கும் பிரதமர் மோடி திங்கட்கிழமை வாழ்த்து தெரிவித்தமைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-


''பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும்" என தெரிவித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி தொலைபேசி மூலம் பிரதமர் மோடிக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.