திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம்:-


திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரகசிய கூட்டணி அமைத்துள்ளார். அனைத்துத் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. நான் எவ்வளவோ முதல்வர்களை பார்த்துள்ளேன்.  ஆனால் எடப்பாடி பழனிசாமி போல யாரையும் பார்த்ததில்லை.


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. அவரை சிரிக்க வைத்தால் பத்தாயிரம் ரூ.10 ஆயிரம் பரிசு தருகிறேன். சிரிக்கக் கூட வைக்க வேண்டாம், பேச வைத்தாலே போதும் 10,000 பரிசு தருகிறேன்" என தெரிவித்தார்.