சென்னை: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து வரும் 7 அல்லது 9-ம் தேதி, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.


இதையடுத்து எம்.எல்.ஏக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்


தமிழக முதலமைச்சராக வேண்டும் என உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்கின்றேன். என்றும் மக்களுக்காக உழைப்பேன். 


ஜெயலிதாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவேன். ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடித்து இந்த அரசு செயல்படும். 


கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முதலில் என்னை முன்மொழிந்தவர் ஓ. பன்னீர்செல்வம். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.


ஜெயலலிதாவின் கொள்கையான மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் படி இந்த அரசு மக்களுக்காகவே செயல்படும்.