சென்னை: தந்தை பெரியார் அவர்களின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் திமுகவின் சமூக வலைதளத்தில் தந்தை பெரியார் குறித்த கருத்தை பகிர்ந்துள்ளனர். அதில், "கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்" - தந்தை பெரியார்.