பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், மார்ச் 22 அன்று அதிகரிக்க தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 15 நாட்களில் 13வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள்  அதிகரித்து, பெட்ரோல் ஒரு லிட்டர் 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள்  அதிகரித்து ஒரு லிட்டர் 100.18 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.


நாடு முழுவதும்  விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் வரிவிதிப்பு நிகழ்வுகளைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.


மேலும் படிக்க | PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR