திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.,யின் புதிய துணை வேந்தராக பிச்சுமணி அவர்களை நியமித்து உத்தரவு பிரப்பித்தார் தமிழக ஆளுநர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த கி.பாஸ்கர் அவர்களது பதவிகாலம் முடிவடைந்த நிலையில் புதிய துணை வேந்தராக பேராசிரயம் பிச்சுமணி அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் நியமித்துள்ளார்.



அடுத்து வரும் மூன்று அண்டுகளுக்கு பிச்சுமணி அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தராக பணியாற்றுமவார் என ஆளுநர் மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.


தற்போது புதிய துணை வேந்தராக பயியமர்த்தப்பட்டுள்ள பிச்சுமணி அவர்கள் ஆசிரியப்பணியில் 37 ஆண்டுகளாக உள்ளார். வேதியல் துறை பேராசிரியரான பிச்சுமணி அவர்கள் தற்போது மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.,யின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.