தமிழர்களுக்கு ஆசி நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழர் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணித்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனை வழிபட்டு நன்றி செலுத்துவர். 


இந்நிலையில் பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசி நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மகர சங்கராந்தி கொண்டாடும் பிறமாநில மக்களுக்கும், மோடி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.