அதுக்குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பொங்கலூர் இரா. மணிகண்டன், திராவிட கட்சிகளுடன் எப்பொழுதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பெரும் அதிர்ச்சையை அளிக்கிறது. இந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. பாமக-வை குறித்து கேவலமாக பேசி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவரே பொய் பேசுகிறார். யாரையும் கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள். அவர் மகன் அன்புமணி மட்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் போதும் என்று ராமதாஸ் நினைகிறார்.


அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பேரம் இருக்கிறது. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே கட்சியின் முக்கிய பொறுப்புக்களை ஆக்கிரமித்து உள்ளனர் என ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்.


பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா. மணிகண்டன் அறிவித்துள்ளார்.