சென்னை: அடுத்த வருடம் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளத்தால், விரைவில் அரசியல் வருவேன் மற்றும் சட்டசபை தேர்தலில் தான் எனது கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எந்தவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் செய்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் கட்சி அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகினர். அது உண்மை தான் என்ற வகையில் ரஜினியின் நடவடிக்கையும் இருக்கிறது. 


அதேநேரத்தில் நாளை மறுநாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்தரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சி தொடங்குவது பற்றி பேசப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.