புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.பி. ராஜாபரமசிவம் இன்று காலமானார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பி ராஜா பரமசிவம். புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக கடந்த 1999 முதல் 2000 வரை ராஜா பரமசிவம் இருந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் இவர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.


2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார். இதன் பின்னர் அவர் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு எந்த பதவியும் கிடைக்காததால் மீண்டும் அதிமுகவிற்கு வந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணியில் இணைந்து தற்போதுவரை பணியாற்றி வந்தார். 


இந்நிலையில் ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் காலமானார்.